Saturday, August 11, 2007
அவள் பார்வைகள் விந்தையானவை
ஒலி வடிவில்
பார்வைகள்
விந்தையானவை
மெளனமான தெருக்கள்
அவள் வருகையால் - சிரிக்கிறது
கள்ளி ஏன் என்னை மட்டும்
காயப்படுத்தி முறைக்கிறாள்
தெருக்கானல்கள் அவள்
பார்வைகளால் நியமாகின்றன
என் கண்களில் கரையும்
கண்ணீர் மட்டும் ஏன்
அவளுக்கு நியமாகவில்லை
அவள் நாளையுடன் இன்று
கதைக்கிறாள் - ஏன்
நேற்று கூட அவள் பார்வை
என் மீது படவில்லை
ஏன் அவள் பார்வைகள் விந்தையானவையா
இல்லை நான் விந்தையற்ற மனிதனா
ஒலி வடிவில்
.: மாறன் :.
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
வணகம்..!
என் கவிதைகள் உங்களைக் கவிதை எழுதச்
சொன்னது என்று எல்லாம் பொய் சொல்லக்கூடாது..!
ம் கவிதை கேட்டேன்.. வாசித்தேன்..!
அழகாய் இருக்கிறது.. மகிழ்ச்சியாக இருக்கிறது..
கேட்கும் போது..! இனிமேல் நான் சற்றே யோசிக்கவேண்டும்
கவிதைகள் தருவிக்கிறதுக்கு
அதுவும் ஒலிவடிவில் :-)
தொடர்ந்து எழுதுங்கள்..!
நேசமுடன்
-நித்தியா
உங்கள் கருத்தை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
நான் சொன்னது உங்கள் தளத்தை பார்த்த பின்பு தான்
என் கவிதைகளையும் இப்படி தளத்தில் போடலாம் என்று தோன்றியது அக்கா
நிஜமாய் சொல்லுறேன் அவளை பாhத்த பின்பு தான் கவிதை வந்தது
சொந்தகாரியும் அவள் தான்….
ஏன் நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சொன்னிங்கள் கவிதை ஒலிவடிவில்
தருவதற்கு….
நன்றி உங்கள் வருகைக்கு அக்கா
மாறன்
வணக்கம் நன்பா……
உணது கவிதைகளின் தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது…. தொடர்ந்து எழுது நன்பனே…. அவள் உணக்குத் தாண்.
Excellent! Keep it up!
வருகைக்கு நன்றி
zenthuran & Anus
Post a Comment