Monday, August 13, 2007

இவளுக்கா நான்




ஒலி வடிவில்

என் கையில் காகிதம்
நீ கொடுத்த காதல் கடிதம்
சிரித்து படித்தேன் - விந்தையான
உன் வார்த்தைகளை

வியந்து போனேன் உன் வெண்மையான
காதலை நினைத்து – வெறுமையான
எனக்குள் சுமை ஒன்றினை உணர்ந்தேன்
அன்று தான் நானும் உன்னை சுமந்தேன்

இரவுகளில் உன்னையே நினைக்கிறேன்
காதலனே நீ கையில் கொடுத்த
காதல் மடலை - இறுக்கி அனைத்து
உறங்குகையில்

சொல்ல வருவேன் என் காதலை
நீ காத்திருக்கும் கணத்திலே
கள்ளி நான் இனி மறையமாட்டேன்
காதலனே காத்திரு – ஒரு நாள்
வருவேன்

ஒலி வடிவில்

.: மாறன் :.

No comments: