ஒலி வடிவில்நான் என்ன எழுதுவது என்று தீர்மாணிக்க வில்லை.
உன்னை விட்டு விலகுவதா இல்லை என்னைத் தொலைப்பதா என்று.
இந்த கடிதம் வரையும் என் விரல்களும் பேனாவும் போட்டி போட்டுக்கொண்டு சொற்களை வேகமாக வடிக்கின்றது
நிறுத்த முடியவில்லை நின்று பார்த்த நிமிடங்களின் களைப்பையும்
நீ எனக்கு பரிசாய் தந்து போன ஏமாற்றங்களையும்
நினைக்கும் போது.
என்னக்குள் நீ வந்த போது என் உயிர் உனக்கு என்று நான் அன்று எழுதிப்போட்ட அந்த உயில் கூட
இன்று பரிசோதனைக்காய் தூசு தட்டப்பட்டு
என் முன்னே வைக்கப்ட்டு விட்டது.
என்ன செய்வேன் உன் மௌனத்தின் விளைவில்
என் மனம் கொண்ட கோபம்.
உனக்காய் உயிர் வீடுகிறேன் நீ இல்லாத பொழுது
எனக்கு ஏது இரவும் பகலும் என்றேன்.
இரண்டும் நீ எனக்கு பதில் சொல்லாத போது மட்டும்
எப்படி நான் நியமாக்குவது.
நீண்ட நாள் வாழ்க்கைப் பயணத்தில் நீ
எனக்கு ஓர் நிமடம் தந்த நிகழ்ச்சி அல்ல.
வாழ்நாள் முழுவதும் நான் கொண்டு நடக்கும்
என் இதயம் என்பதை நான் ஏற்றும்
நீ மறுத்ததால் தானோ என் இதயம் கூட உன்னைப்
போலவே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லச் சொல்லி
இந்த கடிதத்தை வரைகிறதோ…. நான் என்ன எழுதுவது ஏனி நீ சொல்
இப்படிக்கு, நான்.
ஒலி வடிவில்