Monday, January 28, 2008

நிலவான அவளுக்கு





நிலவான அவளுக்கு
நீண்ட இருளில் நான் எழுதும்
எழுத்தக்களின் கோர்ப்பு

கல்லூரி வாசலில் கண்ணிமைத்து
காலம் முழுவதும் என்னை
கட்டிப்போட்டவள்

கண்களுக்குள் ஒரு கவிதை
சொன்னவள் கறுப்பு வெள்ளை
பூக்களின் தேவதையானவள்

தனிமையாய் போனேன்
அவள் எனக்காய் இருப்பதன்
தன்னம்பிக்கையில்

நிமிடங்களின் மாற்றத்தில்
அவள் மட்டும் மறைந்ததால்
என் அலைவரிசையின்

மூன்று நேரங்களின் ஒலி
ஓளிபரப்பும் அவள் - இதயத்தின்
இறுதி முச்சும் அவள்

எனக்குள் அவள் வருகைக்கு பின்புதான்
என் வானத்தில் கூட நிலவும்
தரிசனம் தருகிறதோ

உனக்காய் தானடி நான்



ஒலி வடிவில்



என்னைப் பார்த்தேன் உன் வீட்டு
வாசலில் நீ வந்து போன போது
உன் புன்கையின் பார்வையில்

விழிகளில் வியந்தாய் என்
வருகையைக் கண்டு நான் மட்டும்
என்ன மறைப்பேன

நீண்டநாட்காய்; நான் காணதா உன்
கண்கள் என்னைப் பர்த்ததும்
புன்னகைத்ததை நீ மறைப்பயோ

என்னவென்று சொல்வது கண்டதும்
கட்டிப்போட்ட காள்வன் போல்
என் மனம் உன் மனச்சிறைக்குள்

புதுமையடைந்தது என்
உன்மேலான காதல் உரிமையாய்
சொல்கிறேன் உனக்காய் தானடி நான்

வந்து விடு என்னுடன் - உன்
கோபங்களுக்கு விடைகொடுத்து
எனக்கு உயிர் கொடுக்க


ஒலி வடிவில்

எனக்குள்ளே




கண்ணசைவில் என்னை அசைத்தால்
போல் அவள் பார்வைகள் என்னை
பதம் பர்த்ததுண்டு

பகல் சூரியன் என் மூளைவரை
சுடும் வரை அவளுக்காய்
காத்திருந்ததுண்டு

அவள் அசைவில் என்னை
அசைத்து பார்த்து சற்று
சிரித்ததுண்டு

என்மேலான ஆசைதுரந்து
அவளுக்காய் வாழவும்
பழகிக்கொண்டதுண்டு

தெரிந்தும் தெரியமாலும்
அவள் பார்வைக்காய்
என்னை தொலைத்துண்டு

மாற்றம் எனக்குள்
வந்ததுண்டு நீ மட்டும்
வந்து போன மாயமென்ன
எனக்குள்ளே

Monday, January 21, 2008

அன்புள்ள அவளுக்கு,



ஒலி வடிவில்

நான் என்ன எழுதுவது என்று தீர்மாணிக்க வில்லை.
உன்னை விட்டு விலகுவதா இல்லை என்னைத் தொலைப்பதா என்று.
இந்த கடிதம் வரையும் என் விரல்களும் பேனாவும் போட்டி போட்டுக்கொண்டு சொற்களை வேகமாக வடிக்கின்றது
நிறுத்த முடியவில்லை நின்று பார்த்த நிமிடங்களின் களைப்பையும்
நீ எனக்கு பரிசாய் தந்து போன ஏமாற்றங்களையும்
நினைக்கும் போது.

என்னக்குள் நீ வந்த போது என் உயிர் உனக்கு என்று நான் அன்று எழுதிப்போட்ட அந்த உயில் கூட
இன்று பரிசோதனைக்காய் தூசு தட்டப்பட்டு
என் முன்னே வைக்கப்ட்டு விட்டது.
என்ன செய்வேன் உன் மௌனத்தின் விளைவில்
என் மனம் கொண்ட கோபம்.
உனக்காய் உயிர் வீடுகிறேன் நீ இல்லாத பொழுது
எனக்கு ஏது இரவும் பகலும் என்றேன்.
இரண்டும் நீ எனக்கு பதில் சொல்லாத போது மட்டும்
எப்படி நான் நியமாக்குவது.

நீண்ட நாள் வாழ்க்கைப் பயணத்தில் நீ
எனக்கு ஓர் நிமடம் தந்த நிகழ்ச்சி அல்ல.
வாழ்நாள் முழுவதும் நான் கொண்டு நடக்கும்
என் இதயம் என்பதை நான் ஏற்றும்

நீ மறுத்ததால் தானோ என் இதயம் கூட உன்னைப்
போலவே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லச் சொல்லி
இந்த கடிதத்தை வரைகிறதோ…. நான் என்ன எழுதுவது ஏனி நீ சொல்
இப்படிக்கு, நான்.


ஒலி வடிவில்

Friday, January 18, 2008

நேற்று




உங்களுக்கு நான் கோபக்காரணாய்
எனக்குள் மட்டும் புது பரிசோதனையானாய்
முறையே தெரிந்திருக்கும் தெரிந்தது

கிழித்து பார்த்தேன் மடலை
கூடவே என் மனமும் கிழிகிறதா
என்று பார்க்க

விளைவாய்

கிழந்தது என் மடலும் என் மனமும்
எனினும் என் மனப்பிளவுக்குள்
அவள் மட்டும் எட்டிப்பார்த்தாள்

ஏழனம் செய்கிறோள் என்ன செய்வது
ஏழை நான் என்மனம் கூட என்னிடம்
இல்லை

போனது போகட்டும் வருவது வரட்டும்
என்றோ விடியலுக்காய் எவனோ ஒருவன்
நான் எங்கோ போகிறேன்

உங்கள் கோப்காரனையும்
என் பரிசோதனையையும்
முடிந்தால்

ஏற்றுக்கொள்ளுங்கள் நாளை

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்




ஒலி வடிவில்

சேரவேண்டும் என்றுதான்
கவிதை எழுதினேன்
இன்று பிரிவதற்குமாய்
கவிதை சொல்கிறேன்

பார்த்ததும் பிடித்ததுமென்றேன்
பார்வைகள் கென்றதுமென்றேன்
பார்ப்பவை அவளுமென்றேன்

நீலா அவள் முகமென்றேன்
ஏன் நேற்றுக்கூட அவள்
நினைவுமென்றேன்

வருடங்கள் பறந்ததென்றேன்
பாடசாலை நாட்களுமென்றேன்
கூடவே படிப்பும் என்பதைமறந்து போனேன்

மறந்தது , நினைத்தது
நீரின் அலைகள் - ஏனி
குளப்பமில்லை என்மனத்தில் கூட

நாளைய விடியலுக்காய்
இன்று இதை சமர்ப்பிகிறேன்
சாகமாட்டேன் நீ இல்லையேன்றால்

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்

ஒலி வடிவில்

நீ மறுந்தது நான் புரிந்தது



காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதினேன்
என்னை கொன்றுவிட்டு அல்ல என்பதை
நீ மறந்தாயோ

காதலிக்கிறேன் என்று கடிதம் போட்டேன்
காலம் முழுவதும் உன்முடிவின்றி என்பதை
நீ மறந்தாயோ

நீ வேண்டும் என்று நிலாவை தூதுவிட்டேன்
நீ என்னை கொன்றபின் நான் ஏன் உனக்கு என்பதை
நீ மறந்தாயோ

வேண்டாம் வேண்டும் வேற்றுமை
நான் நீ நாட்களின் முடிவு
நீ மறந்தது நான் புரிந்தது

ஓவியம் சொல்வது………….




மாலையாய் நான்
மயக்கினாய் நீ

காதலாய் நான்
கண்ணீராய் நீ

கற்பனையாய் நான்
காதலியாய் நீ

கதலுக்காய் நான்
கள்ளியாய் நீ

வேண்டாம் நீ
வேணும் நான்
நேற்றாய் நீ
நாளையாய் நான்

மாறீவீட்டேன் நான்
மனதில் மட்டும் நீ

கையசைத்தேன் நான்
கையசைக்கிறாய் நீ

நிறுத்தவில்லை நான்
நிற்றவேண்டாம் நீ

மனதோடும் என் நினைவோடும்

புரிந்தது இதுவும்……

கோமாளியாய் நான்
கோதையாய் நீ

வேதனையாய் நான்
வேடிககையாய்; நீ

பிந்திக்கிடைத்த கடிதம்……..



ஒலி வடிவில்


உன் பிந்திய முடிவால்
எழுதுகிறேன்………….

பிடிக்கவில்லை உன் பேச்சும்
உன் அனுகலும்
உன் அனுபவமும்………….

காதலும், காவியமும் உண்மை
உன் காதல் மட்டும் பொய்

பெண்மையே பொறுமைக்கு
பெருமைசேர்க்காதே………

பெட்டிக்குள் போனாலும்
என் பொறுமைக்குள் நீ
இல்லை……………….

மனதுக்கும் எனக்கும்
இப்படியே விவாதம்

நடுவராய் காதல்………

இன்றுதான் பிந்திக்கிடைத்த
உன் தகவல் கடிதமும்
காதலுக்கு தீர்ப்பாய் கிடைத்தது

கிடைத்தும் கிழித்துவிட்டேன்
மனதையும் மனத்திரையின்
உன் படத்தையும்…………

வாசித்து பார். ஏமாற்றுவதன்
வலியை உனர்வாய்………..

உனக்கு முந்திக்கிடைத்தால்
முந்திக்கொள்………………

ஒலி வடிவில்

Thursday, January 3, 2008

அந்த நாளில்



ஒலி வடிவில்


அவளைக் காட்டிய
பூமிக்கும் வானுக்கும்
இடையில் இவன் மட்டும்
பறந்து கொண்டிருந்தான்

அவள் வாய்மொழி மட்டும்
தன் தாய்மொழியேன உச்சரித்து
உள்ளத்தில் மழலையாய்
மனனனம் செய்து கொண்டிருந்தான்

கால்பதிக்க களவோடும்
வானில் பறப்பதற்க்கு
ஆசையோடும் அசைபோட்டுக்
கொண்டுமிருந்தான்

அசையின் ஆசையாய்
அழகி அவள் மட்டும்
இவனுக்குள் ஆணிவேர்
இட்டாள்

மாலைவந்ததும் மயக்கமாய்
மனதைமட்டும் தயக்கமாய்
கதைக்க வெட்கமாய்
சிரித்துக் கொண்டிருந்தான்

அவள் சிரித்து கதைத்து
கனவோடு இவனை தீண்டி
இவனுடன்

கதைத்த நாளில்

ஒலி வடிவில்

Good Morning


என்னடி கோபம்
காலைச் சூரியன்
சுட்ட கோபமோ

உன் கனவோடு
வந்து போன என்னை
கலைத்த கோபமோ

கதைத்து சிரித்தது
விடைபெறச் சொல்லமுன்
கலைந்த கனவோடு கோபமோ

தெரிகிறது உனக்குள்
என்னை , உன்விழிகளுக்குள்
காதல் என்றும்

சிரிப்பு வரவில்லையா உனக்கு
பெண்மையே கோபம் விடு
புரிந்து கொள்..

சூரியன் சுட்டது உன்
வீட்டு யன்னல் ஓரம்
பாவம் நான் தவிக்கிறேன்

உன்னை என்னை
பார்க்க சொல்லி………..
…………………………............