
கண்ணான காதலிக்கு கல்லான
இதயமென்று தெரிந்தும்
கரைப்பாதற்காய் முயல்கிறான்
வெள்ளை ரோய ஒன்றை
சிவப்பு ரோயவாக்க தன்
இரத்தம் நனைத்து
அவளுக்காய் கரம் கொள்கிறான்
அவள் வரும் தெருவின்
தெருவிழக்காய் அதிகாலை
குளிரிக்குள் நடுங்கிக்கொண்டு
அவளின் வருகைக்காய்
தன் விழிகளை தெடவிட்டுக்கொள்கிறான்
தொலைவில் அவள்
வருகையைக் கண்டு
தன் கரங்களை தயார்
செய்து கொள்கிறான்
கைகளுக்குள் இருக்கும்
தன் குருதியால் நனைத்த
ரோயவை அனைத்தபடியே
தன் வாழ்த்தும்
வார்த்தைகளுக்கு வழிகாட்டிக்கொண்டு
கண்களை இமைக்காது
அவளின் வருகையை பார்த்து கொள்கிறான்
இடையிடையே குளிர்காறறு திண்ட
அவள் தலைமுடி அசைவில் ஒரு கவிதை
மனதோடும் நினைக்கிறான்
அவள் நெருக்கத்தில்
இவன் நெஞ்சம் நொருங்க
கோபக்காரி கெஞ்சம்
வெட்கம் கொள்ள
இவன் தரிதனம் கல்லான
அவள் இதயத்தை கரைக்க
குருதியால் நனைந்த ரோயவை
குட்டை முடி சூழ்ந்த அழகிக்கு
நிலத்தில் முன்னங்கள் வைத்து
தலை நிமிர்ந்து
தன் காதலை உரைக்கிறான்
செக்கனில் அவள் திகைத்து
செவிகளில்; இவன் உரைமட்டும்
ஒலிபரப்பாகிற்று
கரைந்த கண்ணீர் அவள்
விழிகளை நனைக்க
கடந்த நாட்களின் பிரிவில்
இருவரும் ஒருவரை ஒருவர்
அனைத்து இதயங்களை
இடம் மாற்றினார்
இவர்களுக்கு இதுதான் காதலர் தினம்.

