
ஒலி வடிவில
கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன் - கண்ணீரும்
என் முன்னால் வந்து என்னவள் எங்கே என்கிறது..
வார்த்தைகளை நான் தேடி - புத்தகத்தை
நான் புரட்ட - தாழ்களில் நான் வரைந்த
உன் கண்கள் என்னை பார்த்து
விழி மூடுகின்றன
சரி கவிதை எழுத வேண்டாம் என்று
எழுந்து நிற்க என் கால்கள்
என்னை கேட்கிறது உன்னவளுக்காகவா
காத்திருக்கிறாய் என்று..
மொளனமாய் நான் என் மெத்தையில்
இருக்க கடிகார முள் தான் சுற்றுவதை
ஒருகணம் நிறுத்தி - உன்னவள் வரும்
நேரம் சொல்…நான் நினைவுபடுத்துகிறன் என்கிறது
இறுதியில் நீ வருவாய் என்று கூறி நான்
நித்திரைக்கு செல்கிறேன்…காரணம்
கனவிலாவது பதில் சொல்வாய்
கண்மணி நீ என்று…
ஒலி வடிவில
.: மாறன் :.
No comments:
Post a Comment