
எழுத்துக்களை மட்டும் பேனாவால்
எழுதத்தெரிந்த எனக்கு - இன்று
என்னை கொல்லும் உன் நினைவுகளையும்
பற்றி எழுதத் தோன்றுகிறது
என் பேனாக்களின் முனைகள் என்
புத்தக தாள்களின் மூளைகளில்
உன் பெயர்களை செதுக்குகின்றன
மைகள் உன் பெயர்களை வரைகின்றன
என் புத்தக தாள்களில் மையத்தில்
நான் ஆழுது வடித்த கண்ணீர் துளிகள்
உன் பெயருக்கு நீர் ஊற்றி குளிறுட்டுகின்றன
உன் பெயரின் அருகில்
என் பெயர் எழுதும்
என் பேனாக்களுக்கு இடம் கொடுத்த
புத்தக தாள்கள் கேட்கின்றது
உன்னை எப்பொழுது உன்னவள்
ஏற்றுக்கொள்வாள் என்று
பேனாவின் முடிவு அதனுள்
இருக்கும் மைகளில்
தாள்களின் முடிவு எழுத்துகளின்
எண்ணிக்கையில்.
என் காதலியே உன் பேச்சில் மட்டுமே
என் தெடக்கமும் முடிவும்
எனக்கு இப்பொழுது என்
போனாவும் தாள்களும் தான்
எனக்கு தூதுவர்கள்
.: மாறன் :.
No comments:
Post a Comment