Friday, September 21, 2007

நான்... குடை...அவள்...




அன்று….

தூரளில் அவள் குடைபிடிக்க
அவளருகில் நான் - வருவதால்
அவள் குடை மடித்தாள்
இருவருமே நனைவோம் என்று

சற்று மழைபெருக்க
நான் நனைவேன் என்று
குடைவிரித்தாள்
அந்த இரவுத் தூரளில்

முதன் முதல் குடைக்குள்
நான் என்பதை மறந்து
அவளுடன் தொலைத்தேன்
என்னை

அவள் என்னைப் பார்த்த முதல்
இடம் எது என்று கேட்டதும்
சற்று விழையாட்டாய்
School முடிந்ததும்
என்றேன்

ஏன் என்னைப் பிடித்தது என்றதும்
பார்த்ததும் பிடிக்கவில்லை
என்றேன்

அவள் முகம் என்னைப் பார்க்க
தெருவிழக்கின் மஞ்சள் ஒளியில்
தெரிந்த அவள் கண்கள்
மட்டும் தான் பிடித்தது
என்றேன்

சிரிப்பில் அவள் முகம் சிவக்கக்
கண்டேன்

அவள் வீடு அண்மிக்க
நான் நனைவேன்
என்று மழை
பெருக்க முன் வீடு
போகச் சொன்னவளே

புரிந்து கொண்டேன்
அன்று அவள் எனக்காய்
குடைபிடித்து நடந்தாள்
என்று

இன்று…..

கொட்டும் மழையில்
அவளிடம் கெஞ்சுகிறேன்
அவள் குடைக்குள் -அவள்
மட்டும் மறைந்து
குடை மட்டும் தெரிகிறது


மழையில் நனையும்
என்னைக் குடைக்குள்
அவள் அனைக்கவில்லையே

சிலவேளை அவள்
மனதில் இருக்கும்
நான் நனைந்துவிடுவேன்
என்று அவள் தனக்கே
குடைபிடிக்கிறாள் போல்.....


:.மாறன்.:

Sunday, September 16, 2007

பவித்திரமானவளே….




நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
நீ நினைப்பதைச் சொல்ல மறுக்கிறாய்
என் காதலை ஏற்றுக்கொள்ளத் தவிக்கிறாய்
மறுதடவை என்னையே நினைக்கிறாய்

என் பேச்சை மறுத்து
தனிமையாக்கி தனிமையில்
செல்கிறாய் தவிக்கிறேன்
உன் மௌன வார்த்தை புரியாமால்

கற்றுத்தா கற்றுக்கொள்கிறேன்
மௌனமொழியை என் காதலை
உன்னிடம் உணர்விக்க

பவித்திரமானவளே என்ன
உன் பெயரும் பவி என்றோ
ஆரம்பிக்கின்றது

நான் நிக்கிறேன் நீ நடக்கிறோய்
சற்று திரும்பிப்பார் என்னை அல்ல
நினைவுகளையும் நான் தனிமையாய்
தவித்த நாட்களையும்

பவித்திரமானவளே சொல்லிவிடு.....

:.மாறன்.:

Tuesday, September 4, 2007

சுவரொட்டியாய்



ஒலி வடிவில்

சாலை ஓரமாய் சாய்ந்திருக்கிறேன்
சுவர்களோடு சுவரொட்டியாய்
செய்தி சொல்லிக் காத்திருக்றேன்

கண்மணி உன் கடைகண்களால்
பார்த்து விடு உயிர் பெற்று
உயிர் தருகிறேன் உனக்காய்

சுடும் வெய்யிலும் கொட்டும்
மழையும் சாலை ஓரம் என்னைத்
தீண்டி செல்கிறது தெரியவில்லை

உன் ஓரப்பார்வை
செல்ல சிரிப்பு அன்புக்
கோபமும் செல்ல நடையும்
மட்டுமே தெரிகிறது

சாலையின் சுவரே சற்றுப் பொறு
சத்தியமாய் சொல்கிறேன் என்
காதலி என்னைக் கூட்டி செல்வாள்

இன்று மட்டும் நான் உன்னுடன்
சுவரோட்டியாய் இருக்கிறேன்

.: மாறன் :.

என்னோடு நீ இருந்தால்




கண்மூடிக் கண்மணியே
நீலவுக்ககுக் கூட்டிச் செல்வேன்
காற்றோடு கதை பேசி
காதோடு இசை பாடி
பக்குவமாய்ப் பார்திடுவேன்

பைத்தியமாய் நான் இருப்பேன்
உன் மீது மட்டும்
நீ அடித்தாள் அழுதிடுவேன்
அன்பான உன் மடிமீது சாய்திடவே

ரோஜா நீ என்பேன்
இல்லை என்றால்
நான் என்பேன்
நீ சினுங்கும் செக்கன்களை
நான் ரசிப்பேன்

ஒன்று மட்டும் நீ
என்னை மட்டும் காதலித்தால்
நானும் உன்னை மட்டும்
என்னருகில் வைத்திருப்பேன்

என்னோடு நீ இருந்தால்

.: மாறன் :.