அன்று….
தூரளில் அவள் குடைபிடிக்க
அவளருகில் நான் - வருவதால்
அவள் குடை மடித்தாள்
இருவருமே நனைவோம் என்று
சற்று மழைபெருக்க
நான் நனைவேன் என்று
குடைவிரித்தாள்
அந்த இரவுத் தூரளில்
முதன் முதல் குடைக்குள்
நான் என்பதை மறந்து
அவளுடன் தொலைத்தேன்
என்னை
அவள் என்னைப் பார்த்த முதல்
இடம் எது என்று கேட்டதும்
சற்று விழையாட்டாய்
School முடிந்ததும்
என்றேன்
ஏன் என்னைப் பிடித்தது என்றதும்
பார்த்ததும் பிடிக்கவில்லை
என்றேன்
அவள் முகம் என்னைப் பார்க்க
தெருவிழக்கின் மஞ்சள் ஒளியில்
தெரிந்த அவள் கண்கள்
மட்டும் தான் பிடித்தது
என்றேன்
சிரிப்பில் அவள் முகம் சிவக்கக்
கண்டேன்
அவள் வீடு அண்மிக்க
நான் நனைவேன்
என்று மழை
பெருக்க முன் வீடு
போகச் சொன்னவளே
புரிந்து கொண்டேன்
அன்று அவள் எனக்காய்
குடைபிடித்து நடந்தாள்
என்று
இன்று…..
கொட்டும் மழையில்
அவளிடம் கெஞ்சுகிறேன்
அவள் குடைக்குள் -அவள்
மட்டும் மறைந்து
குடை மட்டும் தெரிகிறது
மழையில் நனையும்
என்னைக் குடைக்குள்
அவள் அனைக்கவில்லையே
சிலவேளை அவள்
மனதில் இருக்கும்
நான் நனைந்துவிடுவேன்
என்று அவள் தனக்கே
குடைபிடிக்கிறாள் போல்.....
:.மாறன்.:
