Wednesday, May 21, 2008

Son of Malar


மலரென்றாள் அழகு என் தாயின்
பெயரே மலர்

மலர் பூக்களின் செல்லப் பெயரல்ல
என் தாயின் சொந்தப் பெயர்

பூவாய் அன்று பூத்தவள் எனனக்கு
அண்னண் ஆக்கா கட்டித்தந்த
என் சொந்தகாரி

பேனபிடித்து வலித்துப்போன
என் விரல்களை தன்
உதடுகொண்டு உறசியவள்

சின்னாய் ஒடித்திருந்த என்னை
சிறுவனாக்கி இன்று இளஞ்ஞனாக்கி
இருவிளி கொண்டு பார்த்தவள்

இவள் விழிகளின் கண்ணிர்
துளிக்கு நான் பதில் சொல்வேனா
துளித்திளியாய் துவிர்ந்து போவேனா

Tuesday, May 13, 2008

உன்மையைச் சொல்கிறேன்


உன்னை நான் காதலித்தது உன்மை
என் காதல் எனக்குள் உயிர்
பெற்றதும் உன்மை

உயிர் உள்ளவரை உன்னை மறவேன்
என நான் சொன்னதும் உன்மை
மூச்சுக்காற்றாய் நான் உன்னை
சுவாசித்தும் உன்மை

உயிர் எங்கும் உன் நினைவு
உணர்வேங்கும் உன் உயிர்
நிறைந்துதம் உன்மை

ஒருமுறை நீ என்னை காதலித்தாய்
சொல்லாதும் உன்மை இதற்கு மேல்
உன்னை காதலித்தம் உன்மை

உன்னை நான் சுமந்ததும் உன்மை
உனக்காய் கவிதை எழுதியதும் உன்மை
கவிதைக்கு பொய் அழகு என்பதும் உன்மை

உன்மையை சொல்கிறேன் உன்மேல்
இன்று காதல் இல்லை உணர்விலும்
என் உயிரிலும் நீ இல்லை

உல்லாசமாய் உலாவருகிறேன் என்னை
மட்டும் சமந்து கொண்டு.இறந்து போன
காதலுக்கு இறுதி வணக்கம் செலுத்திவிட்டு

Wednesday, April 9, 2008

விடை கொடு போகிறேன்









நீ மழை நான் இலை விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன் இதற்கு மேல் உறவில்லை

Wednesday, March 26, 2008

கல்லறை வரைக்கும்



காத்திருந்து நாளாகிப்போச்சு
கண்மணியே கண்கலோரம்
கண்ணீராகிப் போச்சு

கவிதை எழுதி காலம்போச்சு
கல்லறைக்கு நான் போக
நேரமாகிப் போச்சு

நிலவோடும் என் இரவோடும்
இருண்டுபோன என் உலகோடும்
உயிர் இன்றி கிடக்கிறேன்

என்னைக் களவாடிப்போனவளே
என் கல்லரைக் கரையில்
ஒரு பூப் பூத்தும்

உன் மனதோடு என் முகம்
கொண்ட காதல் பூப்
பூக்கவில்லையே

கல்லறை வரைக்கும்
நான் சுமந்த காதல்
சுமையல்ல ஒரு சுகம்தான்

Saturday, March 1, 2008

அன்று ஒரு நாள்




அன்று ஒரு நாள்

மழையில்லை குடையில்லை
மழலைகளும் இல்லை
அவள் மட்டும் எனக்குள்ளே
இப்படித்தான் தெரிந்தாள்

காட்ச்சில் கண்களை பறித்தவள் போல்
பூப்போல் பூப்போல் என்
நெஞ்சைக் கொன்றவள்…………..

Friday, February 15, 2008

இதுவும் ஒரு காதலர் தினம் தான்




கண்ணான காதலிக்கு கல்லான
இதயமென்று தெரிந்தும்
கரைப்பாதற்காய் முயல்கிறான்

வெள்ளை ரோய ஒன்றை
சிவப்பு ரோயவாக்க தன்
இரத்தம் நனைத்து
அவளுக்காய் கரம் கொள்கிறான்

அவள் வரும் தெருவின்
தெருவிழக்காய் அதிகாலை
குளிரிக்குள் நடுங்கிக்கொண்டு
அவளின் வருகைக்காய்
தன் விழிகளை தெடவிட்டுக்கொள்கிறான்

தொலைவில் அவள்
வருகையைக் கண்டு
தன் கரங்களை தயார்
செய்து கொள்கிறான்

கைகளுக்குள் இருக்கும்
தன் குருதியால் நனைத்த
ரோயவை அனைத்தபடியே

தன் வாழ்த்தும்
வார்த்தைகளுக்கு வழிகாட்டிக்கொண்டு
கண்களை இமைக்காது
அவளின் வருகையை பார்த்து கொள்கிறான்

இடையிடையே குளிர்காறறு திண்ட
அவள் தலைமுடி அசைவில் ஒரு கவிதை
மனதோடும் நினைக்கிறான்

அவள் நெருக்கத்தில்
இவன் நெஞ்சம் நொருங்க
கோபக்காரி கெஞ்சம்
வெட்கம் கொள்ள

இவன் தரிதனம் கல்லான
அவள் இதயத்தை கரைக்க
குருதியால் நனைந்த ரோயவை
குட்டை முடி சூழ்ந்த அழகிக்கு

நிலத்தில் முன்னங்கள் வைத்து
தலை நிமிர்ந்து
தன் காதலை உரைக்கிறான்

செக்கனில் அவள் திகைத்து
செவிகளில்; இவன் உரைமட்டும்
ஒலிபரப்பாகிற்று

கரைந்த கண்ணீர் அவள்
விழிகளை நனைக்க
கடந்த நாட்களின் பிரிவில்

இருவரும் ஒருவரை ஒருவர்
அனைத்து இதயங்களை
இடம் மாற்றினார்

இவர்களுக்கு இதுதான் காதலர் தினம்.