Wednesday, August 29, 2007

ஊமை காதலி


உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது

உன் காதலுக்காய் காத்திருந்தேன்
கற்பனையை கடந்திருந்தேன்
காதலி நீயும் ஏன் என்னை
கடந்து சென்றதேனா

கால்கள் வலிக்கும் நேரம் வரை
கண்களில் கண்ணீர் கரையும் வரை
கள்ளி காத்திருக்கிறேன்
உன் காதல் கனியுமென்று

இன்றும் இருக்கிறேன்
விரைவில் தொலைபேசி
அழைக்குமென்று...

.:மாறன்:.

பிரிவு



ஒலி வடிவில


பிரிவதை விட பிரிக்கப்படுவதன்
வலியே ஆதிகம் - நானும் இன்று
பிரிக்கப்பட்டவன் தான் -
காரணமின்றி...

காத்திருக்கும் கணத்தில்
கள்ளி அவள் மறைந்தாள்
நானும் அன்று – நினைத்தேன்
காரணம் இல்லை என்று

நிமிசங்கள் நின்று நீ
எங்கே என்றன...
வாரங்களும் வார்த்தையால்
விடைபெற்றன..

அன்பு நீ எனக்கு
நான் உனக்கு என்ற
உண்மை மறைக்கப்டுவதை
நான் ஏற்க மாட்டேன்
நீயும் நானும் பிரிக்கப்படுவதையும் கூட...

ஒலி வடிவில

.: மாறன் :.

1:35 மணி





நினைத்து நினைத்து பார்க்கிறேன்
அந்த ஒரு நிமிடத்தை
நின்று சிரித்த உன் முகம்
பார்க்க

கடிகாரத்தை கெஞ்சினேன்
கெதியேன்று போகச் சொல்லி
கள்ளி உனனை நான் பார்க்க
அந்த 1:35 மணிக்கு

பாடசாலை மணியிடம் மன்றாடினேன்
பாவை உன்னை பார்க்க ஒரு முறை
அடிக்குமாறு

நினைவுக்கு வந்தது நீ என்னை பார்த்த
முதல் மணி நேரமும் 1:35 மணி தான்
என்று

அன்று ஓடாத கடிகாரம் இன்றும்
என் வீட்டில் 1:35 மணியைத்தான்
காட்டுகிறது என்றும் உன் முகம்
பார்கக சொல்லி

.: மாறன் :.

என் குடும்பம்




தாய் மடி உறங்கி -தந்தையிடம்
அடி வாங்கி காலையில்
எழும்பகிக் கல்லூரி செல்ல -முன்

கள்ளமாய் தங்கை அறை
சென்று தூங்க அவள் -துரத்த
அண்ணன் அனைக்க - நான்
களைப்பேன் என் உறங்கலை

என் பாடம் முடிய பாவம்
தாய் பசி இருப்பால் என்று
விரைந்து நான் வர

அன்பு அழைப்பால் வீடு வர
சீனுங்கலாய் நான் இருக்க
என்னை அடித்து என் அன்னை
எனக்கு உணவுட்டுவாள்

பின்னேரம் பொய் சொல்லி
நான் வெளியேற - தந்தை
வர முன் வீடுவர - அன்னை
சொல்ல நான் சொன்ன
பொய் எனை சிரிக்கும்

மாலைவர அண்ணன் சொல்லில்
தந்தை முகம் முதல்
கடிகாரம் வரை
அவன் பேச்சில் சிரிக்கும்

நேரம் போகும் மதி இரவாகும்
தந்தை உறுக்க நாம்
செல்வோம் உறங்க
அண்ணன் அடிக்க - நான்
அழுவேன் தந்தை
அனைப்பில் நான் உறங்குவேன்

.: மாறன் :.

Tuesday, August 21, 2007

என் உயிர் காதலி



இதயத்தின் நான்கு அறைகளிலும்
ஆழகி உன் புகைப்படங்கள்
பதியப்பட்டு கிடக்கின்றது
சுழலும் என் குறுதியும் ஓரு
முறை உனைப் பார்கக வேண்டும் என்று

நான் சுவாசிக்கும் சுவாசக்காற்றினை
சுவாச அறைகள் நிறுத்தி
என் காதலுக்காய் தூது செல்லக் கேட்கின்றது
நீ அவற்றை சுவாசிக்கும் போது
சொல்லவும் சொல்கின்றது

ம்ம்ம்
இன்று நான் உன்னைப்

பார்க்க வருவதில்லை
தினம் தினம் உன் வருகைக்காய்
காத்திருப்பதும் இல்லை

காரணம்

என் உயிரை காக்கும் என்
இதய அறைகளும் சுவாச அறைகளும்
உனையே நினைப்பதால்

புரிந்து கொள் உன்னை விரும்புவது
நான் எனக்குள் இருக்கும் என் உயிர்
இதனால் தான் நீ எனக்கு என்றும்
என் உயிர் காதலி

.: மாறன் :.

Wednesday, August 15, 2007

கண்ணம்மா





கண்ணம்மா பாரதிக்கு
காதலன் நான் உனக்கு
கண்களில் காலம் தான் காட்டிடுமா!
உன் மௌனம் தான் நம் காதல்
சொல்லிடுமா!

என் உயிர் தான் உனக்கு
என் காதல் எனக்கு மட்டும் தான்
கண்ணம்மா காலம் போகலாம்
காதல் கரைந்திடுமா!

காற்றிலே கவிதையாய்
கண்களில் கண்ணீரயா
காதல் என் காதல்
உரைத்திட

காலையில் காத்திருப்பேன்
கல்லூரி செல்லவல்ல
கண்ணம்மா உன் குரல்
கேட்டிடவேய்

நீ பதில் சொல்
நான் பாத்திருப்பேன்
உன் காதலுக்காய்
இல்லை இல்லை என்
காதலுக்காய்!!!

.: மாறன் :.

நீ வருவாயா……







காதல் கடலிலே காத்திருக்க
சொன்னவளே
குளிரிரும் நிலவும் குளிர்காய
சொன்னது - கூடவே
உன்னவள் உனக்குதான்
என்றது.

வார்த்தைகளும் இனிக்க
தொடங்கியது…
நாட் குறிப்புக்கள் நகல்கள்
ஆகியது.

இரவும் இனிதே இனித்தது
உன் கனவுப் பார்வைகளால்.
ஏன் என் கனவிலே மட்டும்……

சுடும் சூரியன் வந்தும்
நீ வராமல் போனதேன்…
ஏன் நீ இரவில் தெரியும்
நிலவா இல்லை கோபமா…..

.:மாறன்:.

உயிர்த்திடேன்…



ஒலி வடிவில்

காதல் சொல்லிட வார்தை இல்லை
உன் மொளனம் என்னை கொல்லுதடி
நான் தனிமையில் தவிப்பது உனக்கு புரியாதோ…

நான் உன்னை பார்த்த பின்பு தான்
காதலுக்காய் காத்திருந்தேன்
என்று உனக்குத் தெரியாதோ…

காதலுக்காய் உயிர் வாழ
உன் உள்ளம் எனைத் தேடதோ…
கண்ணே நாம் இருவரும் கலந்திட
காற்றே உன்னை கேட்காதோ…

என் தேகம் விட்டு பிரிந்த உயிரை
உயிர்த்திட நீ வருவாயோ…
உண்மையுடன்
நான் உன்னை
காணாமல் உயிர்த்திடேன்…

ஒலி வடிவில்

.: மாறன் :.

பதில் சொல்வாயா



ஒலி வடிவில

கவிதை எழுத முயற்ச்சிக்கிறேன் - கண்ணீரும்
என் முன்னால் வந்து என்னவள் எங்கே என்கிறது..
வார்த்தைகளை நான் தேடி - புத்தகத்தை
நான் புரட்ட - தாழ்களில் நான் வரைந்த
உன் கண்கள் என்னை பார்த்து
விழி மூடுகின்றன

சரி கவிதை எழுத வேண்டாம் என்று
எழுந்து நிற்க என் கால்கள்
என்னை கேட்கிறது உன்னவளுக்காகவா
காத்திருக்கிறாய் என்று..

மொளனமாய் நான் என் மெத்தையில்
இருக்க கடிகார முள் தான் சுற்றுவதை
ஒருகணம் நிறுத்தி - உன்னவள் வரும்
நேரம் சொல்…நான் நினைவுபடுத்துகிறன் என்கிறது

இறுதியில் நீ வருவாய் என்று கூறி நான்
நித்திரைக்கு செல்கிறேன்…காரணம்
கனவிலாவது பதில் சொல்வாய்
கண்மணி நீ என்று…

ஒலி வடிவில

.: மாறன் :.

Monday, August 13, 2007

இவன் இவளுக்கு எழுதுவது…..






இவன் இவளுக்கு எழுதுவது…..

எழுதுவது வார்த்தைகள்
எழுந்து நிற்பது என் காதல்.
ஏக்கங்கள் எனக்கா ?
ஏமாற்றங்களும் எனக்கா?

தேவதை
தேடல்கள் தொடர்ந்தும்
தேடினேன் நீ
இல்லை
பார்வைகளும்
பார்ப்பதற்க்கு விழிகளும்
இல்லை
பாவம் தெருக்களும்
என்னுடன் தேடுகின்றது……

இவன் இவளுக்கு
என்று சொன்னவர்கள்
இன்றும் சொல்ல
மறந்ததது ஏனோ
பாவம் நானோ…இல்லை
என் காதலோ
பாhக்கவில்லை
உன் விழிகளையும் விழியின்
பார்வைகளையும்……

தென்றலை நான் தேடியபோது
தோன்றிய தேவதை நீ
விழிகளின் பார்வையால்
பட்டு போனவன் நான்
பாராமல் நீ போனதேன்……

பைத்தியமாய் அலைகிறேன்
பாதி நேரம் தாய்க்கு பிழ்ளையாய்
மீதி நேரம் உனக்கு காதலனாய்
காத்திருக்கிறேன்….

.: மாறன் :.

முதன் முறை




ஒலி வடிவில்

முற்சந்தியில் நீ நிற்க
முன்று நிமிடங்களை நான் தொலைத்தேன்
உன் முதற் பார்வையில் - முதன் முறையாய்

ஒருநிமிடம் பார்த்த முதல் முகம்
இருநிமிடம் ஈர்க்க வைத்த இருவிழிகள்
மறுநிமிடம் நினைக்க வைத்தது உன் முகம்

தொலைத்து விடுவேனோ என்னை
தொலைந்து விடுவளோ – என்னை விட்டு
போக நினைத்த கால்களை தடுத்த நாள்

அன்றுதான் நானும் முதன் முறையாய்
சுமந்தேன் உன்னை

ஒலி வடிவில்

.: மாறன் :.

இவளுக்கா நான்




ஒலி வடிவில்

என் கையில் காகிதம்
நீ கொடுத்த காதல் கடிதம்
சிரித்து படித்தேன் - விந்தையான
உன் வார்த்தைகளை

வியந்து போனேன் உன் வெண்மையான
காதலை நினைத்து – வெறுமையான
எனக்குள் சுமை ஒன்றினை உணர்ந்தேன்
அன்று தான் நானும் உன்னை சுமந்தேன்

இரவுகளில் உன்னையே நினைக்கிறேன்
காதலனே நீ கையில் கொடுத்த
காதல் மடலை - இறுக்கி அனைத்து
உறங்குகையில்

சொல்ல வருவேன் என் காதலை
நீ காத்திருக்கும் கணத்திலே
கள்ளி நான் இனி மறையமாட்டேன்
காதலனே காத்திரு – ஒரு நாள்
வருவேன்

ஒலி வடிவில்

.: மாறன் :.

Saturday, August 11, 2007

அவள் பார்வைகள் விந்தையானவை




ஒலி வடிவில்

ார்வைகள்
வி
ந்தையானவை

மெளனமான தெருக்கள்
அவள் வருகையால் - சிரிக்கிறது
கள்ளி ஏன் என்னை மட்டும்
காயப்படுத்தி முறைக்கிறாள்

தெருக்கானல்கள் அவள்
பார்வைகளால் நியமாகின்றன
என் கண்களில் கரையும்
கண்ணீர் மட்டும் ஏன்
அவளுக்கு நியமாகவில்லை

அவள் நாளையுடன் இன்று
கதைக்கிறாள் - ஏன்
நேற்று கூட அவள் பார்வை
என் மீது படவில்லை

ஏன் அவள் பார்வைகள் விந்தையானவையா
இல்லை நான் விந்தையற்ற மனிதனா

ஒலி வடிவில்

.: மாறன் :.

என் பேனாவும் தாள்களும்



எழுத்துக்களை மட்டும் பேனாவால்
எழுதத்தெரிந்த எனக்கு - இன்று
என்னை கொல்லும் உன் நினைவுகளையும்
பற்றி எழுதத் தோன்றுகிறது

என் பேனாக்களின் முனைகள் என்
புத்தக தாள்களின் மூளைகளில்
உன் பெயர்களை செதுக்குகின்றன

மைகள் உன் பெயர்களை வரைகின்றன
என் புத்தக தாள்களில் மையத்தில்
நான் ஆழுது வடித்த கண்ணீர் துளிகள்
உன் பெயருக்கு நீர் ஊற்றி குளிறுட்டுகின்றன

உன் பெயரின் அருகில்
என் பெயர் எழுதும்
என் பேனாக்களுக்கு இடம் கொடுத்த
புத்தக தாள்கள் கேட்கின்றது
உன்னை எப்பொழுது உன்னவள்
ஏற்றுக்கொள்வாள் என்று

பேனாவின் முடிவு அதனுள்
இருக்கும் மைகளில்
தாள்களின் முடிவு எழுத்துகளின்
எண்ணிக்கையில்.

என் காதலியே உன் பேச்சில் மட்டுமே
என் தெடக்கமும் முடிவும்

எனக்கு இப்பொழுது என்
போனாவும் தாள்களும் தான்
எனக்கு தூதுவர்கள்

.: மாறன் :.

Friday, August 10, 2007

என் - அவள்




ஒலி வடிவில்


குட்டை முடி குத்தும்
பார்வை! கொஞ்சும் கன்னம்
பார்த்தால் சிரிக்கும் முகம்
பார்வையால் வசிக்கும்
கண்கள் அவள்

அருகில் போனால் பயம்
நான் தனிமையாய் நின்றால்
சுகம் அவளுக்கு - அருகில்
அழைக்கும் கால்கள் (யாரும் இல்லையென்றால்)

சுட்டித் தனமான பேச்சு
கள்ளத்தனமான பார்வை
பல் இடைவெளிகளில்
ஒழிந்த சிரிப்புகள் – அவளிடம்

சட்டென்று பதில் - சற்று
யோசிக்கும் குணம் - இரண்டும்
அவள் நடையில் முன்பு
ஆமை இன்று express

என்னை மட்டும் பார்த்தால்

பிடிக்கவில்லையாம் என்னை
ஆனால் கள்ளமாய் பார்பாவாம்
முறைக்கிறேன் என்பாவாம்
நேரில் கதைக்க மாட்டாவாம்
Phone il மட்டும் கதைப்பாளாம்

நீண்ட பார்வை நியமாய்
அழகான கண்கள் - என்
கவிதைகளுக்கு சொந்தகாரி
யாரும் அல்ல கண்ணழகி

என்னிடம் கேட்பாவாம்
என்னை முதல் பார்த்த
இடம் எதுவென்று ?
சற்று அமைதியானால்
ஏன் என்னை மட்டும் பார்த்ததும்
பிடித்தது என்பாள்

நான் உன் கண்கள் என்றால்
வெட்கப்படுவாளாம் , சற்று
தலைகுனிந்து சிரிப்பாளம்

ஆனால் என்னை
பிடிக்கவில்லையாம்
நம்புங்கள் அவளை !!!

இவள் தான் என் - அவள்.
சொல்லவதற்கு அதிகம்
அவளிடம் மட்டும்

ஒலி வடிவில்

.: மாறன் :.

பதியாத சுவடுகள




சுத்தித் திரிந்த காலம்
காற்றிலே கதைத்தை கவிதைகள்
பாடசாலை கீதம் பாட
நான் உனை நினைத்து சிரித்த
நாட்கள்

பள்ளி முனையில் மர நிழலில்
தோழனுடன் நான் காத்திருந்த
நிடமிங்களும் ! நீ என்னை பார்த்து
நடந்த நாட்கள்

நிழலாய் நான் உனை தெடர்ந்த
நாட்கள் ! நீ இல்லை என்று
தெரிந்தும் எவரையோ நீ என்று
பார்த்து சிரித்த நிமிடங்கள்

வகுப்பு தொடக்கத்தில் வாசல்
வந்து ! வகுப்பின் முடிவு வரை
காத்திருந்து உனை ரசித்த
நாட்களும் நிமிடங்களும்

கோவில் தேடத என் கால்களை
தினங்களில் காக்க வைத்த
நிமிடங்களும் நாம் சிரித்த
நாட்களும்

ஏன் உன் மனதில் மட்டும் இவைகள்
பதியப்படாமல் போனது

.: மாறன் :.