Friday, December 28, 2007

கண்ணீருக்கு பதில்




பிரிவென்று தெரியவில்லை
பிரிந்து போக நீங்கள்
உடலும் இல்லை

எப்போதும் எங்கள்
மூச்சுக் காற்றின்
முகவரியாய்

நாங்கள் நடந்து
போகும் நாட்களாய்
நாளிதழின் பக்கமாய்

விடாது துடிக்கும்
எங்கள் இதயமாய்
கால் படும் பூமியாய்

ஆதவன் சந்திரன்
இரண்டுமாய் உங்களை
காண்கிறோம்

தந்தையே உங்கள் பிரிவுமட்டும்
பொய் நீங்கள் எங்களுடன்
எப்போதும்

மறையாது நிற்கிறீர்கள்

கண்ணீர் மட்டும் நாம் சொன்னால்
அழுகிறது எங்கே எங்கள்
அப்பா என்று ஃஃஃஃ

ஒருமுறை சொல்லுங்கள்
நீங்கள் எங்களுடன்
என்று …………

Thursday, December 27, 2007

நான் வரமுடியவில்லை





ஒலி வடிவில்

வார்த்தைகள் இருந்தும் வாரங்கள் கடந்தும்
நான் வரமுடியவில்லை ஆனாலும் நான்
நனைத்தை கண்ணீருடன் உறைந்த வார்த்தைகள்
உன்னை என்னிடம் வரச்சொல்லும்

இரவுகள் இருண்டும் பகல்கள் வெளிச்சும்
வெளிவராத உண்மைகளை நீ சுமக்க
நான் உன்னையும் சுமக்க - என் இதயம்
வலிக்கின்றது உனக்கு தெரியவில்லையா

இருவாரங்களில் இரு விழிகாட்டி என்னை
உன்னுடன் இறுக்கி அனணத்தவளே
இன்று இரு மாதங்கள் ஆகியும்
மௌனமாய் இருப்பது ஏன்

ஒலி வடிவில்


.: மாறன் :.

என்னை காதலிப்பாயா




ஒலி வடிவில்

நாட்களை மறந்து நடந்து செல்கிறேன்
நாளை உன் உறவுகளுக்காய் - என்னையே
தருகிறேன் - இன்று நீ
என்னை காதலிப்பாய் என்றால்

கொடுத்துவிட்டேன் என்னையே
தினம் தினம் உன் மௌனம்
மட்டும் கொழுத்தி செல்கிறது – எனக்குள்
இருக்கும் உன்னையே

ஒருவேளை நான் உன்னை
மறக்க நினைத்தால் - தயவுசெய்து
இந்த பூமி என்னை
இழந்துவிடும்

என்னை காதலிப்பாயா என் காதலியே…


ஒலி வடிவில்

.: மாறன் :.

தூது செல்வாயா




அழகு நிலவே எனக்காகத் தூது செல்வாயா !
நான் சொல்லி புரியாதா காதலைப்
புரிய வைக்க செய்வாயா !

நினைவுக்கு வருகிறது.. நீ அவளை
கடக்கும் போது சொல்

நான் அவள் வருகைக்காக காத்திருக்கிறேன்
என்றும்!! தினம் தினம் அவள் நினைவுகள்
என்னை கொள்கிறது என்றும்

பார்க்கும் உருவமெல்லாம் அவள் வடிவாக
இருப்பதாகவும், அவள் சிரிப்பும் முறைப்பும்,
பேச்சும் இல்லாமல் வீதிகளும் என்னுடன்
உறக்கம் இன்றி தவிக்கிறது என்றும்
அந்த கோபக்காறியிடம் சொல்

என்னொன்று மறந்து விடாதே நிலவே
அவள் கண்கள் அழகாக இருக்கிறது
என்றும் அவளிடம் கூறு…………….

மற்றது என்னவளை கடக்கும்
போது நீயும் மயங்கி விடாதே

.: மாறன் :.

(நீ கடல்கடந்த போது )

நீ என் காதலியோ




பிரிவிலும் சிரிக்கிறேன்
சொல்லித் தந்தவள் நீ தானே
சிரிப்பிலும் அழுகிறேன்
கற்றுத் தந்தவள் நீ தானே

தேடித் தேடி அலைகிறேன்
தொலைந்து போனவள் நீ தானே
விடைகள் இன்றதித் தவிக்கிறேன்
எனது கேள்விகளும் நீ தானே

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
தெருக்களை அமைதியாக்கிவள் நீ தானே
நேற்றுகளை இன்று ஆக்கினேன்
நாளைகளை வரவைத்தவள் நீ தானே

தினம் தினம் சாகிறேன்
உயிர்த்திட வருபவளும் நீ தானே
நீ என் காதலியோ

.: மாறன் :.

Saturday, December 1, 2007