
நிலவான அவளுக்கு
நீண்ட இருளில் நான் எழுதும்
எழுத்தக்களின் கோர்ப்பு
கல்லூரி வாசலில் கண்ணிமைத்து
காலம் முழுவதும் என்னை
கட்டிப்போட்டவள்
கண்களுக்குள் ஒரு கவிதை
சொன்னவள் கறுப்பு வெள்ளை
பூக்களின் தேவதையானவள்
தனிமையாய் போனேன்
அவள் எனக்காய் இருப்பதன்
தன்னம்பிக்கையில்
நிமிடங்களின் மாற்றத்தில்
அவள் மட்டும் மறைந்ததால்
என் அலைவரிசையின்
மூன்று நேரங்களின் ஒலி
ஓளிபரப்பும் அவள் - இதயத்தின்
இறுதி முச்சும் அவள்
எனக்குள் அவள் வருகைக்கு பின்புதான்
என் வானத்தில் கூட நிலவும்
தரிசனம் தருகிறதோ
No comments:
Post a Comment