
ஒலி வடிவில்
அவளைக் காட்டிய
பூமிக்கும் வானுக்கும்
இடையில் இவன் மட்டும்
பறந்து கொண்டிருந்தான்
அவள் வாய்மொழி மட்டும்
தன் தாய்மொழியேன உச்சரித்து
உள்ளத்தில் மழலையாய்
மனனனம் செய்து கொண்டிருந்தான்
கால்பதிக்க களவோடும்
வானில் பறப்பதற்க்கு
ஆசையோடும் அசைபோட்டுக்
கொண்டுமிருந்தான்
அசையின் ஆசையாய்
அழகி அவள் மட்டும்
இவனுக்குள் ஆணிவேர்
இட்டாள்
மாலைவந்ததும் மயக்கமாய்
மனதைமட்டும் தயக்கமாய்
கதைக்க வெட்கமாய்
சிரித்துக் கொண்டிருந்தான்
அவள் சிரித்து கதைத்து
கனவோடு இவனை தீண்டி
இவனுடன்
கதைத்த நாளில்
ஒலி வடிவில்
2 comments:
great poem.. :)
i lve it. doin a good job bro...
hmm Nice 2 read,
ok i ill try
take care
thanks
Post a Comment