
பிரிவென்று தெரியவில்லை
பிரிந்து போக நீங்கள்
உடலும் இல்லை
எப்போதும் எங்கள்
மூச்சுக் காற்றின்
முகவரியாய்
நாங்கள் நடந்து
போகும் நாட்களாய்
நாளிதழின் பக்கமாய்
விடாது துடிக்கும்
எங்கள் இதயமாய்
கால் படும் பூமியாய்
ஆதவன் சந்திரன்
இரண்டுமாய் உங்களை
காண்கிறோம்
தந்தையே உங்கள் பிரிவுமட்டும்
பொய் நீங்கள் எங்களுடன்
எப்போதும்
மறையாது நிற்கிறீர்கள்
கண்ணீர் மட்டும் நாம் சொன்னால்
அழுகிறது எங்கே எங்கள்
அப்பா என்று ஃஃஃஃ
ஒருமுறை சொல்லுங்கள்
நீங்கள் எங்களுடன்
என்று …………
No comments:
Post a Comment