Thursday, December 27, 2007

நீ என் காதலியோ




பிரிவிலும் சிரிக்கிறேன்
சொல்லித் தந்தவள் நீ தானே
சிரிப்பிலும் அழுகிறேன்
கற்றுத் தந்தவள் நீ தானே

தேடித் தேடி அலைகிறேன்
தொலைந்து போனவள் நீ தானே
விடைகள் இன்றதித் தவிக்கிறேன்
எனது கேள்விகளும் நீ தானே

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
தெருக்களை அமைதியாக்கிவள் நீ தானே
நேற்றுகளை இன்று ஆக்கினேன்
நாளைகளை வரவைத்தவள் நீ தானே

தினம் தினம் சாகிறேன்
உயிர்த்திட வருபவளும் நீ தானே
நீ என் காதலியோ

.: மாறன் :.

No comments: