
பிரிவிலும் சிரிக்கிறேன்
சொல்லித் தந்தவள் நீ தானே
சிரிப்பிலும் அழுகிறேன்
கற்றுத் தந்தவள் நீ தானே
தேடித் தேடி அலைகிறேன்
தொலைந்து போனவள் நீ தானே
விடைகள் இன்றதித் தவிக்கிறேன்
எனது கேள்விகளும் நீ தானே
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
தெருக்களை அமைதியாக்கிவள் நீ தானே
நேற்றுகளை இன்று ஆக்கினேன்
நாளைகளை வரவைத்தவள் நீ தானே
தினம் தினம் சாகிறேன்
உயிர்த்திட வருபவளும் நீ தானே
நீ என் காதலியோ
.: மாறன் :.
No comments:
Post a Comment