Thursday, October 4, 2007

கனவுக்குள் களவு




ஒலி வடிவில்


கல்லூரி வாசலில்
வேகமாய் மாணவர் கூட்டம்
இடையில் இவள் மட்டும்
தன்னை மறந்து
தனக்குள்ளே என்னைச்
சுமந்து

சாலையின் மஞ்சள் கடவையில்
எனக்கு முன்னே தரிசனம்
தருகிறாள்

விழிகள் வியந்து
என்னை பார்க்க
கள்ளி அவள் என்னை
கொள்ளையிட்டால்

என்னையும் இவளையும்
விடைகொடுக்கச் சொல்லி
கல்லூரி மணி ஒலிக்க

தோழி உடன் அழைக்க
என் மனம் வேண்டம்
என்று சொல்ல
விழிகளால் மட்டும்
வருகிறேன் என்று
செல்லிகிறாள்
சின்னவள்

அழகான குட்டையான
கூந்தல் தலையாட்ட
சிரித்துக் கொண்டே
அவள் விழிகள்
இமைக்காது என்னை
பார்க்க

தொலைத்துவிட்டேன்
என்னை அல்ல என்
இதயத்தை


இவளுக்கு விடைகொடுக்க
என் கரங்கள் கையசக்க
யன்னல் திறந்து
தென்றல் தட்டி
கனவு என்றதும்

கூடவே நியம் என்று
சூரியன் என்னை சுட்டும்
சொல்லிட்டு
தெரிந்து கொண்டேன்
கனவுக்குள் களவு என்று

இன்று அத் தெடருக்காய்
வருடமாய் காத்திருக்கிறேன்
என் இதயத்தை கேட்க
அல்ல என்னையும் அவளுடன்
திருடிச் செல்ல சொல்லா

ஒலி வடிவில்


:.மாறன்.:

No comments: