Sunday, September 16, 2007

பவித்திரமானவளே….




நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறாய்
நீ நினைப்பதைச் சொல்ல மறுக்கிறாய்
என் காதலை ஏற்றுக்கொள்ளத் தவிக்கிறாய்
மறுதடவை என்னையே நினைக்கிறாய்

என் பேச்சை மறுத்து
தனிமையாக்கி தனிமையில்
செல்கிறாய் தவிக்கிறேன்
உன் மௌன வார்த்தை புரியாமால்

கற்றுத்தா கற்றுக்கொள்கிறேன்
மௌனமொழியை என் காதலை
உன்னிடம் உணர்விக்க

பவித்திரமானவளே என்ன
உன் பெயரும் பவி என்றோ
ஆரம்பிக்கின்றது

நான் நிக்கிறேன் நீ நடக்கிறோய்
சற்று திரும்பிப்பார் என்னை அல்ல
நினைவுகளையும் நான் தனிமையாய்
தவித்த நாட்களையும்

பவித்திரமானவளே சொல்லிவிடு.....

:.மாறன்.:

No comments: