Wednesday, August 15, 2007

கண்ணம்மா





கண்ணம்மா பாரதிக்கு
காதலன் நான் உனக்கு
கண்களில் காலம் தான் காட்டிடுமா!
உன் மௌனம் தான் நம் காதல்
சொல்லிடுமா!

என் உயிர் தான் உனக்கு
என் காதல் எனக்கு மட்டும் தான்
கண்ணம்மா காலம் போகலாம்
காதல் கரைந்திடுமா!

காற்றிலே கவிதையாய்
கண்களில் கண்ணீரயா
காதல் என் காதல்
உரைத்திட

காலையில் காத்திருப்பேன்
கல்லூரி செல்லவல்ல
கண்ணம்மா உன் குரல்
கேட்டிடவேய்

நீ பதில் சொல்
நான் பாத்திருப்பேன்
உன் காதலுக்காய்
இல்லை இல்லை என்
காதலுக்காய்!!!

.: மாறன் :.

2 comments:

Anonymous said...

ம்..
என்னவாக இருந்தாலும்..
பருவத்தில் பயிர் செய்திடவேண்டும் :-)


நேசமுடன்..
-நித்தியா

மாறன் said...

விவசாயியாக காதல் பயிர் வளக்கிறேன்
காலம் மழை கொடுத்தால் உயிர் நான் கொடுக்கிறேன்

நன்றி அக்கா